நிஜமான அன்புடன் இரங்கல் செய்வோர், போலி புலம்பல்களுள்ளே சிக்கித் தவிப்பதை பார்த்ததும் தோன்றியது....
தேசத் தந்தையின் முகம் பார்க்க
தேனிக்கூடென சேர்த்த கோடிகள் !
பெரியாருக்கு மாலையிட்டுவிட்டு
பெருந்திரளாய் கூட்டம் ஜோசியன் வாயிலில் !
கலாமின் கனவுகளை நினைவாக்க
கண்மணிகள் மூழ்கினர் முகப்புத்தகத்தில் !
'அம்மா'வின் மரணம்
அலைஅலையாய் போலிக்கண்ணீர் !
மலர்வளையங்களில் மட்டுமே மரியாதை !
அழுகையால் மட்டுமே அஞ்சலி !
கண்ணியமிலா கதறல் !
நாடகம் தான் இரங்கல் !
மாண்டோருடன் மறங்களும் ,
மண்ணுள்ளே மக்கிக் கிடக்கையில்...
மாயத்தோற்றங்களால் ஆன குறும்படம்
மக்களின் மனத்திரையில் !
தேசத் தந்தையின் முகம் பார்க்க
தேனிக்கூடென சேர்த்த கோடிகள் !
பெரியாருக்கு மாலையிட்டுவிட்டு
பெருந்திரளாய் கூட்டம் ஜோசியன் வாயிலில் !
கலாமின் கனவுகளை நினைவாக்க
கண்மணிகள் மூழ்கினர் முகப்புத்தகத்தில் !
'அம்மா'வின் மரணம்
அலைஅலையாய் போலிக்கண்ணீர் !
மலர்வளையங்களில் மட்டுமே மரியாதை !
அழுகையால் மட்டுமே அஞ்சலி !
கண்ணியமிலா கதறல் !
நாடகம் தான் இரங்கல் !
மாண்டோருடன் மறங்களும் ,
மண்ணுள்ளே மக்கிக் கிடக்கையில்...
மாயத்தோற்றங்களால் ஆன குறும்படம்
மக்களின் மனத்திரையில் !
Comments
Post a Comment