Skip to main content

நானும் ஓர் ஆத்திகவாதி!

நான்குமறை ஓதும் ஆர்வமில்லை !
நான்குதிசையினரையும் சேர்க்கும் ஆசையுண்டு !

மெக்காவிற்கு திருப்பயணம் சென்றதில்லை !
மெலியோர்க்கு சிறுதொண்டு செய்ததுண்டு !

ஏசுவின் மகிமை பாடியதில்லை !
ஏழைகள் படும்கொடுமை பார்த்துவெகுண்டதுண்டு !

உண்டியல்கள் நிரப்ப உழைத்ததில்லை !
உணவை பகிர்ந்து உண்டதுண்டு !

கல்லில் கடவுள் கண்டதில்லை !
கல்வியை கண்போல் காத்ததுண்டு !

சோதிடம் பார்த்திடும் சோம்பலில்லை !
சோதனைகள் தாண்டி சோபித்ததுண்டு !

பெண்மையை அடிமையாக்கி பேரின்பம் கொண்டதில்லை !
பெண்ணாய்ப் பிறந்ததற்கு பெருமையில் பொங்கியதுண்டு !

மனதில் விடம் விதைக்கும் மதங்களை மதிப்பதில்லை !
மனிதநேயம் நெஞ்சில் என்றும் மலர்வதுண்டு !

சண்டைகள் தூண்டும் சாதிகள் வேண்டியதில்லை !
சமரசம் பேசி அமைதி வளர்க்கும் வேள்வியுண்டு !

பக்தியில்லை ! பாசமுண்டு !
முக்தி தேவையில்லை !
சக்தி கையிலுண்டு !

என் கடவுளிடம் முறையிடத் தேவையில்லை !
எண்ணற்ற கடவுள்களிடமிருந்து முரண்பட்டு தோன்றியதுண்டு !

அன்பே சிவமாய் கருதி
அமைதிப் போர் புரியும்
நானும் ஓர்  ஆத்திகவாதி !

Comments

Popular posts from this blog

நிழல் தேடும் மரம்!!

அன்புள்ள மனிதா!! சுவாசமின்றி நீ தவிக்காமல் இருக்க.. உயிர்காற்று உமிழ்ந்தேன்... தாகம் என்பதை நீ அறியாமல் இருக்க.. மழைநீர் சுரந்தேன்... பசி உன் மீது படராமல் இருக்க... விளைச்சல் கண்டேன்... பனிவிழும் இரவுகளில் சுகமாய் குளிர்காய... சரகாய் உதிர்ந்தேன்... வெயிலில் நீ வாடாதிருக்க நிழல் தரவே... கிளைகள் கொண்டேன்... உனக்கென வாழ்ந்த போதேலாம் எண்ணிக் கொண்டேன்.. நான் உன் தாய் மரம் ! நீ என் சேய் வரம் ! என்று ! இப்போது தான் தெரிகிறது ! பெற்ற தாய்க்கு முதியோர் இல்லம் ! அதில் நானுமோர் அங்கம் ! அன்னையாய் அல்ல ! அணைக்கும் தூணாய் ! - இப்படிக்கு நிஜமெலாம் உனக்கு கொடுத்து விட்டதால் நிழல் தேடி அலையும் மரம் !!

Bitter Pills & Cotton Candies

Life is a jar of bitter pills and cotton candies (if you are not a fan of cotton candies, well.. just replace it with whatever you like). We want only those candies but we know the pills are there and eventually we will be made to swallow them. So, we have somehow made peace with that fact, at least that's what we keep telling ourselves before uttering those silent prayers for the pills to vanish. We know that sometimes awful stuff happen to us, we just need to get through those tough times and go ahead. We keep telling ourselves that the next in line is a cotton candy, so no need to worry..This way life is kept simple, manageable and even worthy. So what's the problem with that? It's delusional. For those who thought that swallowing the pills was the hard part, here is some news to digest... The word bitter was well chosen, but the word pill was definitely misleading. It suggested us that the bitter pills are few in number when compared to the candies and we would ...

மாயையினுள்ளே மயங்கி...!

நிஜமான அன்புடன் இரங்கல் செய்வோர், போலி புலம்பல்களுள்ளே  சிக்கித் தவிப்பதை பார்த்ததும் தோன்றியது.... தேசத் தந்தையின் முகம் பார்க்க  தேனிக்கூடென சேர்த்த கோடிகள் ! பெரியாருக்கு மாலையிட்டுவிட்டு  பெருந்திரளாய் கூட்டம் ஜோசியன் வாயிலில் ! கலாமின் கனவுகளை நினைவாக்க  கண்மணிகள் மூழ்கினர் முகப்புத்தகத்தில் ! 'அம்மா'வின் மரணம்  அலைஅலையாய்  போலிக்கண்ணீர் ! மலர்வளையங்களில் மட்டுமே மரியாதை ! அழுகையால் மட்டுமே அஞ்சலி ! கண்ணியமிலா கதறல் ! நாடகம் தான் இரங்கல் ! மாண்டோருடன் மறங்களும் , மண்ணுள்ளே மக்கிக் கிடக்கையில்... மாயத்தோற்றங்களால் ஆன குறும்படம்  மக்களின் மனத்திரையில் !